மந்திரவாதி ஷபியின் நரபலி கொடூரங்கள்!

Filed under: இந்தியா |

பெண்கள் இருவர் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மந்திரவாதி ஷமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள தம்பதி இருவர் பணம், செல்வம் அதிகமாக வேண்டுமென மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து கொண்டு பெண்களை நரபலி கொடுத்து, நரபலி கொடுத்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக நரபலிக்கு பெண்களை ஆசைக்காட்டி மயக்கி அழைத்து வந்த மந்திரவாதி முகமது ஷபி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். மந்திரவாதி ஷபி குறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகள் முன்னதாக லாரி டிரைவராக இருந்த முகமது ஷபி அப்போதே 75 வயது மூதாட்டி ஒருவரை கடத்தி சென்று கற்பழித்துள்ளான். அதோடு நிறுத்தாமல் அந்த மூதாட்டியின் பிறப்புறுப்பை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் உள்ளான். இதுகுறித்து ஷபி மீது ஏற்கனவே வழக்கு நடந்துள்ளது. தற்போது நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் பிறப்புறுப்பிலும் இத்தகைய காயங்கள் காணப்படுவதாக தெரிகிறது. இதனால் சைக்கோ கில்லர்கள் ஒரே மாதிரியான துன்புறுத்தல் முறைகளை தொடர்வது போல ஷபியும் செய்துள்ளது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு பெண்கள் விடுதியின் அருகே உணவகம் நடத்திய ஷபி அங்குள்ள சில பெண்களிடம் நெருங்கி பழகியதும், அவர்களை பகவந்த்தின் வீட்டுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அப்போது ஷபி கூட வேறு ஒரு நபரும் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி பேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற போலி கணக்கை உருவாக்கி பலருடன் பேசி வந்துள்ளான் ஷபி. அப்போதுதான் பகவந்த் இவனுக்கு பழக்கமாகி உள்ளார். அதன்பின்னர் பகவந்த் தம்பதியினரை மயக்கி நரபலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் ஷபி. அந்த போலி கணக்கில் யாரிடமெல்லாம் ஷபி பேசினான் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண்கள் முதல் மூதாட்டி வரை அனைவரது மீதும் இவ்வளவு கொடுமைகளை செய்துள்ள ஷபிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி ஷபிக்கு ஒரு பேத்தியும் உள்ளார். வெளியே பொறுப்பான குடும்ப தலைவனாக, அப்பாவாக, தாத்தாவாக காட்டிக் கொண்டு மறைமுகமாக இவ்வளவு கேவலமான கொடூரத்தை செசய்து வந்துள்ளான் மந்திரவாதி ஷபி.