மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

Filed under: சென்னை |

மூதாட்டி ஒருவரின் சடலம் ஒன்று எரிந்த நிலையில் சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டியில் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடந்த மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மணலி சிபிசிஎல் நகரைச் சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் (72). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூதாட்டி நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4கிமீ தூரம் தூக்கிவந்து மழைநீர் கால்வாயில் போட்டு, எரித்துக் கொன்றதாகவும், இது சொந்த காரணமாக நடந்த கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.