மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இம்மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பாளர் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பரியேறும் பெருமாள்,” “கர்ணன்” மற்றும் “மாமன்னன்” ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. படத்தின் நாயகனாக துருவ் விக்ரமும், படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் ஏற்கனவே தனுஷ் நடித்த “கொடி,” ஜெயம் ரவி நடித்த “சைரன்” உள்ளிட்ட படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை பா. ரஞ்சித் மற்றும் நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.