முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்!

Filed under: அரசியல்,சென்னை |

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று சட்டச்சபையில் அதற்காக நன்றி தெரிவித்து அவர் பேசும் போது சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை வீணாக்காமல் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.
* 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.
* டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும், இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
* கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
* உலகத்தரத்தில் கட்டமைப்பு, தொய்வில்லாத தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 6 மாபெரும் இலக்கு அரசுக்கு உள்ளது. நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நமது வேகத்தை குறைக்கிறது.
இப்படியான அறிவிப்புக்கள் அதில் அடங்கியிருந்தன.