முத்தூட் பைனான்சில் திருடிய.. கொள்ளையர்களை 18மணி நேரத்தில்.. கைது செய்த போலீசார்.. !!

Filed under: தமிழகம் |

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு நபர்களையும் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர் . மேலும் அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் கொள்ளை போன நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.