முன்னாள் அதிபருக்கு மரணத்திற்கு பின் மரண தண்டனை!

Filed under: உலகம் |

மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு ஒன்றிற்காக அவரது மரணத்திற்கு பிறகு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பர்வேஸ் முஷாரப்பிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிமுகம் செய்தார். இதையடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு வழக்கு கடமையை சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மேல் முறையீடு வழப்பின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இத்தீர்ப்பில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துபாயில் வசித்து வந்த பர்வேஸ் முஷாரப் உடல்நல குறைவால் காலமான நிலையில் அவரது மரணத்திற்கு பிறகு அவருக்கு மரண தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.