ஜப்பான் பிரதமராக அக் 4ம் தேதி புமியோ கிஷிடா பதவியேற்பு

Filed under: உலகம் |

டோக்கியோ, செப் 30:
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, புமியோ கிஷிடா, வரும் அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

ஜப்பான் நாட்டின் பிரதமராக சுகா பதவி வகித்து வந்தார். மக்கள் மத்தியில், கொரோனா வைரசை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி சார்பில், புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் தாரோ கோனோ, புமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான புமியோ கிஷிடா வெற்றிபெற்றார். அவர் ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, வரும் அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.