ரன்வீர்சிங்கிற்கு “பீட்டா” அழைப்பு!

Filed under: சினிமா |

இந்தி நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் செய்ததது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் மறுபடியும் அவரை நிர்வாண போஸ் தரும்படி பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர்சிங் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்ததை விமர்சித்தனர். தற்போது பிரபல விலங்குகள் நல அமைப்பான பீட்டா தங்களது விளம்பரத்தில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் தருமாறு ரன்வீர்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பீட்டாவின் இந்திய துணை தலைவர் சச்சின் பங்கோரா கூறுகையில் “ரன்வீர்சிங் எங்களுடைய இதழுக்கு சிறந்த பொருத்தமாக இருப்பார். மனிதர்களை போல விலங்குகளும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனவை. மனிதர்களை போலவே அவற்றிற்கு தனித்துவமான குணங்கள் உண்டு. அவை சாக விரும்புவதில்லை” என்று கூறினார்.