ரூ.500 கோடி கொள்ளை!

Filed under: தமிழகம் |

500 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் நகைகள் ரொக்கம் ராஜபாளையத்தில் மர்மமான முறையில் தம்பதிகள் கொலை செய்து கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜகோபால் குருபாக்கியம் தம்பதியினர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் பணிபுரிவதால் தம்பதிகள் தனியாக வசித்து வருகின்றனர். ராஜகோபால் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையம் பகுதியில் உள்ள பல நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தம்பதிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும், அவர்களது உடல்கள் அழுகி இருந்தால் இச்சம்பவம் நடந்து ஒரிரு நாட்களே ஆகியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வயதான தம்பதியினர் வீட்டிலிருந்து ரூபாய் 500 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம், ஆவணங்கள் விலை உயர்ந்த பொருள் போன்றவை திருடு போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.