ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

Filed under: அரசியல்,இந்தியா |

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.5900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை என்ன செய்தார்கள்? என்று தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்” என்று பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பேட்டியில், “மத்திய அரசு சென்னைக்கு 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்திற்கு ரூ.900 மோடியை ஒதுக்கினோம் ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது? வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்” என்று கூறியுள்ளார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் இந்த கேள்விக்கு என்ன பதில் கூற போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.