முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ம் தேதி சென்னை வரவிருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
Related posts:
ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்?
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!
துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும் - மருத்துவர் இராமதாசு
விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்!