வானிலை ஆய்வு குறித்து ரமணன் பேட்டி!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என்ற கருத்தை வைத்துள்ள நிலையில் முன்னாள் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “வானிலை ஆய்வு பொருத்த வரை துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது. சில தரவுகள் முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க முடியும். பல்வேறு கிளைமேட் மாடல்கள் இருக்கின்றன. இவற்றை நாம் பிரதானமாக பின்பற்றுவது அமெரிக்க கிளைமேட் மாடல். ஐரோப்பிய கிளைமேட் மாடல்களையும் பின்பற்றுகிறோம். ஆனால் இந்த கிளைமேட் மாடல்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்ப முடியாது. அந்த தகவல்களோடு இஸ்ரோ தரும் தகவல்களையும் ஒப்பிட்டு சிலவற்றை துணிச்சலாக நிராகரித்து சிலவற்றை சொல்வது தான் வானிலை முன்னறிவிப்பு” என்று அவர் தெரிவித்துள்ளார்.