விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் ஜெயகுமார்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து, “அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா?” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், விஜய்யின் அரசியல் குறித்து கூறிய போது அரசியல் என்பது பெருங்கடல், அதில் நீந்தி கரை சேர்ப்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு, இதில் விஜய் அரசியல் என்ற பெருங்கடலில் கரை சேர்கிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.