வேள்பாரி நாவல் திரைப்படத்தில் நாயகன் இவரா?

Filed under: சினிமா |

வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்குனர் ஷங்கர் எடுக்க உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் “இந்தியன் 2” படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அதோடு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் உள்ள தெலுங்கு படத்தையும் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். இப்போது இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக சூர்யாதான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று கதைக்களத்தில் நடித்து வருகிறார்.