2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை!

Filed under: தமிழகம் |

இன்று காலை வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவர் மகன் தேவா (17 வயது) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவருக்குப் பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். தேர்வின் முடிவில், தேவா தமிழ் மற்றும் கம்யூட்டர் பாடத்தில் தோல்வியடைந்திருந்தார். மதிப்பெண்ணும் குறைவாக இருந்ததால், தேவா வேதனையடைந்தாதாக தெரிகிறது. அடுத்த தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்று தேவாவிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், வீட்டில் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.