3 நாட்கள் விடுமுறையுடன் பிரியாணி!

Filed under: சென்னை |

டிஜிபி சைலேந்திர பாபு ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்தும், 3 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகமாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி முடிவடைந்தது. இதற்கான பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல காவலர்கள் செஸ் ஒலிம்பியாட் முடிவடையும் வரை விடுமுறையின்றி இரவு, பகல் பாராமல் பணியாற்றியுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு பிரியாணி விருந்து வழங்கியதோடு அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவித்துள்ளார்.