செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

Filed under: சென்னை,விளையாட்டு |

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை சிறப்பிக்கும் விதமாக சென்னையில் உள்ள பிரபலமான நேப்பியர் பாலத்தில் செஸ் பலகையில் உள்ளது போல வெள்ளை, கருப்பு கட்டங்கள் வரைந்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.