6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

Filed under: தமிழகம் |

பறக்கும் படையினர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ஆறு லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் தாசில்தார் விசாரணைக்கு பின்பு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.