அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

Filed under: அரசியல் |

அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்திபன், செல்வராஜ், பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் சிதம்பரத்தில் பிடிக்கப்பட்ட லாரிகளுக்கு அபராதம் கட்டுவதற்காக ரூபாய் 4 1/2 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து அந்த பணத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் ஒப்படைக்கப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணம் காட்டி பணத்தை மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெளிவாகக் கூறியுள்ளனர்.