புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.

தென்காசி தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193 ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் பெற்ற வாக்குகள் 156940 ஆகும். ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு முறையும் தவறான முடிவு எடுத்திருக்கிறார். இம்முறையும் அவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
Related posts:
விழிப்புணர்வு மாரத்தானில் பரிசு வழங்குவதில் குளறுபடி.போட்டியில் பங்கேற்ற இரு சிறுமிகள் மயங்கி ரோட்டி...
ஓபிஎஸ் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டதற்கு காரணம்?
ரேசன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய்.50,000 சிறுகடன் உதவி - அமைச்சர் செல்லூர் ராஜீ!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,488 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!



