ராயனுக்கு காசோலைகள் கொடுத்த கலாநிதி மாறன்!

Filed under: சினிமா |

ஜூலை 26ம் தேதி நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய அவரின் 50வது படமான “ராயன்” வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கியது. தனுஷின் 50வது படம் என்ற பிராண்டாடோடு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் லாஜிக் எல்லாம் பார்க்காமல் கொண்டாடினர். படம் மிகப்பெரிய அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை சந்தித்து இரண்டு காசோலைகளை பரிசாக அளித்துள்ளார். கதாநாயகன் தனுஷுக்கு ஒரு காசோலையும், இயக்குனர் தனுஷுக்கு ஒரு காசோலையுமாக அளித்துள்ளார்.