மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Filed under: உலகம் |

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார்.

மீண்டும் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்து செய்தியில்; நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் இரண்டாவது முறை மகத்தான வெற்றிக்கு ஜெசிந்தா ஆர்டெனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு வருடத்திற்கு முன்னர் நாங்கள் கடைசியாக சந்தித்ததை நினைவு கூர்ந்து, இந்தியா-நியூசிலாந்து உறவை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.