Home » Entries posted by Shankar U (Page 108)
Entries posted by Shankar

சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

Comments Off on சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; தமிழிசை!

புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுமி கொலை வழக்கிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “சிறுமியின் கொலை குறித்து அறிந்ததும் நிலைகுலைந்து விட்டதாகவும், […]

Continue reading …

அதிமுக தேமுதிக கூட்டணி முடிவுக்கு வருமா?

Comments Off on அதிமுக தேமுதிக கூட்டணி முடிவுக்கு வருமா?

நாளை மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக தேமுதிக இடையே கூட்டணிக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு, கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஏழு […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிவகங்கை அரன்மனைவாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நகர் திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகன் ஸ்டானினின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் […]

Continue reading …

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் குறித்து விமர்சனம்

Comments Off on அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் குறித்து விமர்சனம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்.பி.ஐ முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் எஸ்.பி.ஐ 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “எஸ்பிஐ வங்கி நினைத்தால் இந்த டேட்டாக்களை இரண்டு நிமிடங்களில் எடுத்து விடலாம், ஆனால் நான்கு மாதங்கள் காலதாமதம் கேட்டிருப்பது என்பது நிர்வாக சீர்கேடு என்று அறிய முடிகிறது, […]

Continue reading …

அமைச்சர் சேகர்பாபு மோடி குறித்து விமர்சனம்!

Comments Off on அமைச்சர் சேகர்பாபு மோடி குறித்து விமர்சனம்!

பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். புயல் வெள்ளம் ஏற்பட்டபோது திமுக உதவி கரம் நீட்டுவதற்கு பதிலாக பொதுமக்களுக்கு துயரத்தை அதிகம் தந்தது என்றும் இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி ஒருமுறை கூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார், தேர்தல் நேரத்தில் எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக […]

Continue reading …

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

Comments Off on தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி உடன் முதலமைச்சர்கள் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திடீரென பிரதமரின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றும் மத்திய அரசுடன் நாங்கள் சமூகமாக இருக்க விரும்புகிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த பின் தெலுங்கானா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் அரசு நிகழ்ச்சியில் […]

Continue reading …

கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

Comments Off on கமல் படத்திதிருந்து விலகுகிறாரா துல்கர் சல்மான்?

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் ‘தக் லைஃப்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் புரொமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதம் செர்பியாவில் ஷூட்டிங் நடந்தது. இப்போது சென்னையில் […]

Continue reading …

கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

Comments Off on கமல் சாரை பாக்க கோரிக்கை வைத்த ரியல் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’!

“மஞ்சும்மள் பாய்ஸ்” மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய பெற்றி பெற்றுள்ளது. படத்தின் உண்மை சம்பவத்தில் இருந்தவர்கள் கமல்ஹாசனை நேரில் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 2006ல் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சென்ற மலையாள இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்த பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்து விட அவர்களது நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றினார்கள் என்ற உண்மைக் கதையை மையப்படுத்தி வெளியான படம் ‘மஞ்சும்மள் பாய்ஸ்’. கேரளா, தமிழ்நாடு முழுவதும் ஹிட் அடித்துள்ள இந்த படம் கேரளாவில் டாப் ஸ்டார் படங்களுக்கு […]

Continue reading …

சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

Comments Off on சாதனை செய்த “மஞ்சும்மள் பாய்ஸ்!”

“மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மலையாள திரைப்படம். கேரளாவை தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது இத்திரைப்படம். படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் “குணா” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்” பாடல் […]

Continue reading …

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

Comments Off on குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்று வெளியான தகவலை அடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். […]

Continue reading …