Home » Entries posted by Shankar U (Page 2)
Entries posted by Shankar

பழனி கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை!

Comments Off on பழனி கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை!

அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் பழனி கோயிலுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பழனி மலை கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பழனி கோவிலுக்கு செல்லும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக பயணம் வருகின்றனர். அமெரிக்கவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் தனது சார்பில் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனம் கொடுத்துள்ளார். […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

Comments Off on காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

நடிகர் மன்சூர் அலிகான் ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் […]

Continue reading …

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி!

Comments Off on காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி!

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் சித்தவுனி கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் பிந்த் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி என்ற இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளார். ஆனால், ராகேஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்துக்கு வந்த லட்சுமி, தான் கொண்டு வந்திருந்த பிளாஷ்டிக் பையை ராகேஷ் முகத்தில் வீசினார். […]

Continue reading …

செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!

Comments Off on செல்போனால் விபரீதம்; தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 35) மனைவி சவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் செல்போனில், அடிக்கடி விளையாடுவது வழக்கம். இதனை சவுந்தர்யா கண்டித்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் முத்துராமன் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சவுந்தரி கணவரை திட்டியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்துராமன், சவுந்தரியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில், […]

Continue reading …

சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

Comments Off on சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவான “சைரன்” திரைப்படம் கடந்த மாதம் ரிலீசானது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது. இத்திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வருகிறது. இப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. […]

Continue reading …

தகிக்க போகும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Comments Off on தகிக்க போகும் வெயில்; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பல இடங்களில் உயரும் என தெரிவித்துள்ளது. இந்த வருடம் தமிழ்நாட்டில் இன்னும் அக்கினி வெயிலே தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. இம்மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று […]

Continue reading …

அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

Comments Off on அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் இன்று ஏப்-19ம் தேதி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, […]

Continue reading …

தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Comments Off on தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே இன்று மக்களவை தேர்தலுக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்றும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இன்று ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையிலிருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் கூட்டம் இன்று வரை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை சென்னை திருச்சி முன்பதிவில்லா சிறப்பு […]

Continue reading …

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி!

Comments Off on ஐஸ்க்ரீம் சாப்பிட்ட குழந்தைகள் பரிதாப பலி!

தெருவில் விற்கப்படும் ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பலியான சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே பெட்டஹள்ளி கிராமத்தில் பிரசன்னா என்பவரும், அவரது மனைவி பூஜாவும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திரிசூல், திரிஷா என ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் அப்பகுதியில் தெருவில் ஐஸ்க்ரீம் விற்று வந்தவரிடம் குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துள்ளனர். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சில மணி நேரங்களில் குழந்தைகளின் உடல்நிலை மோசமாக தொடங்கியுள்ளது, உடனடியாக […]

Continue reading …

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

Comments Off on வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வேங்கை வயல் உள்பட இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோபம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த கோபத்தை அப்பகுதி மக்கள் தேர்தலில் காட்டி வருவதாக தெரிகிறது. வேங்கை வயல் மற்றும் இறையூர் ஆகிய […]

Continue reading …