
சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தே ரசிகர்களிடையே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். […]
Continue reading …
கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் முதல் […]
Continue reading …
உள்துறைஅமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரே நாட்டில் இல்லாத போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறும் போது, “கடந்த 50 நாட்களாக மணிப்ப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் அமைதி காக்கிறார் தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லை இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
வண்டலூர் பூங்காவில் 3டீ மற்றும் 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அருகிலுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3டீ, 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை […]
Continue reading …
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை! இதுவரை ராகுல் காந்தி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் […]
Continue reading …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 8ம் தேதி பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுதை அடுத்து வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்றினார். ஆனால் அதே நேரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை […]
Continue reading …
கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் பல கட்டங்களாக நடந்து வந்தது. படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் படக்குழு ஒப்பந்தம் செய்து […]
Continue reading …
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான “எஃப் ஐ ஆர்” திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை […]
Continue reading …
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “நண்பன்” மற்றும் “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “லியோ” திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இத்திரைப்படத்துக்காக காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட் நடத்தி இப்போது சென்னையில் விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். “லியோ” படம் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கான KOMODO-X என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளாராம் மனோஜ் பரமஹம்சா. இந்த அதிநவீன […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான “ஆதிபுருஷ்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டது. வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக படக்குழுவின் சார்பாக தினமும் செய்தி வெளியிடப்படுகிறது. 3 நாளில் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. “சக்திமான்” சீரியல் மூலம் பிரபலமான முகேஷ் கண்ணா படத்தில் ராவணனாக […]
Continue reading …