Home » Entries posted by Shankar U (Page 254)
Entries posted by Shankar

தமிழகத்திற்கு இது சாபக்கேடு; திருமாவளவன்!

Comments Off on தமிழகத்திற்கு இது சாபக்கேடு; திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர்கள் அரசியல் வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் என்று கூறியுள்ளார். எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜயகாந்த், டி ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர திட்டமிட்டனர். ரஜினி மட்டும் திடீரென கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். இன்னும் விஜய், விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியல் ஆசையுடன் உலா வருகின்றனர். […]

Continue reading …

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது?

Comments Off on முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது?

உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து வந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் […]

Continue reading …

விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

Comments Off on விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி” பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு “லியோ” படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் […]

Continue reading …

உதயநிதியிடம் தைரியமிருந்தால் கலால் துறையை கொடுக்க முடியுமா?

Comments Off on உதயநிதியிடம் தைரியமிருந்தால் கலால் துறையை கொடுக்க முடியுமா?

அமைச்சர் சி.வி.சண்முகம் “தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்” என்று சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர், “அமைச்சர் முத்துசாமி தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். முதலமைச்சரே உங்களுக்கு தைரியமிருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளையடித்து உங்கள் குடும்பத்திற்கு […]

Continue reading …

தெலுங்கானா பாஜக எம்.பி.யின் ஓப்பன் டாக்!

Comments Off on தெலுங்கானா பாஜக எம்.பி.யின் ஓப்பன் டாக்!

தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. தெலுங்கானா மாநிலம் […]

Continue reading …

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து சைலேந்திர பாபு!

Comments Off on தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து சைலேந்திர பாபு!

காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இதுகுறித்து கூறும் போது, “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றோம். 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 100 பேரை கொண்ட 5 குழுவினர் […]

Continue reading …

‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா விளக்கம்!

Comments Off on ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா விளக்கம்!

நடிகர் பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 3 நாட்களில் உலகம் முழுதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரியளவில் வரவேற்பில்லை என்றாலும் ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாசுர், தனது டுவிட்டர் பக்கத்தில், “சனாதன சேவைக்காகவே இத்திரைப்படத்தை உருவாக்கினோம். ராமாயணத்திலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம் […]

Continue reading …

“மாமன்னன்” ஐரோப்பிய ரிலீஸ் உரிமை யாருக்கு?

Comments Off on “மாமன்னன்” ஐரோப்பிய ரிலீஸ் உரிமை யாருக்கு?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது “மாமன்னன்” திரைப்படம். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரெயிலர் ரிலீஸ் நடந்தது. திரைப்படத்தின் சிறப்பான டிரெயிலர் சமூகவலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “மாமன்னன்” திரைப்படம் […]

Continue reading …

வெப் சீரிஸில் நடிக்கும் விமல்!

Comments Off on வெப் சீரிஸில் நடிக்கும் விமல்!

நடிகர் விமல் “களவாணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வியடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. அவர் நடித்த “விலங்கு” வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை “புரூஸ் லி” படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி […]

Continue reading …

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது!

Comments Off on மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது!

பாமக தலைவர் அன்புமணி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய விசைப்படகையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிக்கவில்லை. அவர்கள் பயணித்த விசைப்படகு பழுதடைந்து விட்டதால் காற்றின் வேகத்தில் நெடுந்தீவு பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட […]

Continue reading …