Home » Entries posted by Shankar U (Page 258)
Entries posted by Shankar

“பிச்சைக்காரன் 3” விஜய் ஆண்டனியின் மெகா திட்டம்!

Comments Off on “பிச்சைக்காரன் 3” விஜய் ஆண்டனியின் மெகா திட்டம்!

“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட்டானது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் உள்ளார். இத்திரைப்படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களையும், வெற்றிகரமாக வசூல் செய்தும் வருகிறது. முதல் பாகம் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை என்றாலும், இந்த படமும் ஹிட்டானது. தமிழை விட தெலுங்கில் இந்த படம் பெரியளவில் […]

Continue reading …

கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் தகவல்!

Comments Off on கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் தகவல்!

கடந்த ஆண்டில் ரிலீசான “விக்ரம்” திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து அவர் படங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் முதலில் வினோத் இயக்கும் படம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் திரைக்கதையில் […]

Continue reading …

சினிமாவிலிருந்து விலகும் காஜல்?

Comments Off on சினிமாவிலிருந்து விலகும் காஜல்?

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கும் முதன்மை கதாநாயகியாக வலம் வருகிறார். லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

நாங்கள் யாருக்கும் அடிமையல்ல- எடப்பாடி பழனிசாமி

Comments Off on நாங்கள் யாருக்கும் அடிமையல்ல- எடப்பாடி பழனிசாமி

நேற்று காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கருத்து தெரிவித்திருந்தார். அதில் பாஜகவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். மேலும், அதிமுக பாஜகவின் அடிமை என்றும் கூறியிருந்தார். இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னால் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதலமைச்சர் வெளியிட்ட கருத்திற்கு பதிலுரை வெளியிட்டுள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதட்டத்தோடு பேசுகிறார். இப்பதட்டத்திற்கு என்ன காரணம்? அதிமுகவை முதலமைச்சர் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த […]

Continue reading …

இறந்த பெண்ணின் உடலை மரக்கட்டையில் சுமந்து சென்ற அவலம்!

Comments Off on இறந்த பெண்ணின் உடலை மரக்கட்டையில் சுமந்து சென்ற அவலம்!

பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் சாலை இல்லாததால் இளம் பெண்ணின் உடலை பல கி.மீ தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது […]

Continue reading …

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் சொத்து மீட்பு!

Comments Off on மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் சொத்து மீட்பு!

நீதிமன்றத்தின் உத்தரவால் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டுள்ளது. மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில் உள்ளது. 1190 ஏக்கர் தரிசு நிலம் 2009ல் குத்தகைக்கு விடப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்ற அடிப்படையில் 29 ஆண்டு குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகைக்கு பெற்றதிலிருந்து நிலத்திற்கான வாடகை, குத்தகை பணம் எதுவுமே தொழிலதிபர் கொடுக்கவில்லை என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் […]

Continue reading …

ஹரி & விஷால் படத்தின் கதாநாயகி யார்?

Comments Off on ஹரி & விஷால் படத்தின் கதாநாயகி யார்?

“யானை” திரைப்படம் இயக்குனர் ஹரிக்கு கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ரிலீசாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. இதற்கடுத்து ஹரி விஷால் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் இப்போது முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்-று கூறப்படுகிறது. அதற்குள் விஷால் “மார்க் ஆண்டனி” படத்தை முடித்துவிட்டு வருவார் என தெரிகிறது. படத்தில் கதாநாயகியாக […]

Continue reading …

புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கியதில் மரணம்!

Comments Off on புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கியதில் மரணம்!

திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் பகுதியில் விமல் ராஜ்க்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டரான இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கி உள்ளார். அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் […]

Continue reading …

பேஸ்புக் கொடுத்த இழப்பீடு!

Comments Off on பேஸ்புக் கொடுத்த இழப்பீடு!

நீதிமன்றம் பேஸ்புக் கணக்கு காரணமின்றி முடக்கப்பட்டதாக பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உலகம் முழுவதிலும் மக்கள் பலராலும் பயன்படுத்தப்படுவதில் முக்கியமானது பேஸ்புக். அதிகமான பயனாளர்கள் உள்ள நிலையில் பதிவுகள் இடுவதற்கு பேஸ்புக் பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அந்த விதிகளை மீறினால் பேஸ்புக் அந்த பயனரின் கணக்கை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நீக்க முடியும். ஆனால் பல சமயம் பேஸ்புக் சரியான காரணமின்றி பயனர்கள் கணக்கை முடக்குவதாகவும் குற்றச்சாட்டு […]

Continue reading …

நடிகர் பிரபாஸின் படக்குழுவினர் அதிர்ச்சி!

Comments Off on நடிகர் பிரபாஸின் படக்குழுவினர் அதிர்ச்சி!

இன்று திரையரங்குகளில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியை அடுத்து தமிழ் மொழியில் மட்டுமே உருவாகி உள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் மிகக்குறைந்த ஆடியன்ஸ் மட்டுமே இருப்பதாகவும் ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 20 பார்வையாளர்கள் மட்டுமே […]

Continue reading …