Home » Entries posted by Shankar U (Page 257)
Entries posted by Shankar

தனுஷ் படத்திலிருந்து விலகிய ஹீரோ!

Comments Off on தனுஷ் படத்திலிருந்து விலகிய ஹீரோ!
தனுஷ் படத்திலிருந்து விலகிய ஹீரோ!

நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குநராக நிரூபித்தார். அவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அப்படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இப்போது அவர் தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனுஷின் தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கப் போவதாக […]

Continue reading …

“சங்கமித்ரா” திரைப்படத்தின் சஸ்பென்ஸ் பற்றி சுந்தர் சி!

Comments Off on “சங்கமித்ரா” திரைப்படத்தின் சஸ்பென்ஸ் பற்றி சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் “சங்கமித்ரா.” 2017ம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டு, 2018ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர். ஆனால் பொருளாதார பிரச்சனையின் காரணமாக இப்படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இப்போது “பொன்னியின் செல்வன்” வெளியாகி ஹிட்டாகியுள்ளது. மீண்டும் இத்திரைப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர் […]

Continue reading …

குஜராத் பிபர்ஜோய் புயலில் பெரும் சேதம்!

Comments Off on குஜராத் பிபர்ஜோய் புயலில் பெரும் சேதம்!

குஜராத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் தோன்றிய பிபர்ஜோய் புயல் கரையை கடந்ததால் அங்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. தற்போது அப்புயல் வலுவிழந்து ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய பிபர்ஜோய் புயல், குஜராத் மாநிலம் கட்ச் என்ற மாவட்டத்தில் கரையை கடந்தது. இப்புயலால் அங்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாய்ந்த மின்கம்பங்கள் […]

Continue reading …

புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்!

Comments Off on புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்!

நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடந்தது. இப்புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. புயல் கரையைக் கடந்த 140 கிமீ வேகத்தில், குஜராத்தில் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்புயலின்போது, மொத்தம் 1171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இதில் 707 கர்ப்பிணிகள் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். இதுபற்றி குஜராத் மாநில சுகாதாரத்துறை முன்பே கர்பிணிகள் பட்டியலை தயார் செய்து இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, […]

Continue reading …

விஜய் மாணவரை தேர்ந்தெடுத்தில் சர்ச்சை கிளப்பும் வீடியோ!

Comments Off on விஜய் மாணவரை தேர்ந்தெடுத்தில் சர்ச்சை கிளப்பும் வீடியோ!

நடிகர் விஜய் தனது நடிப்பையும் தாண்டி விரைவில் அரசியலிலும் இறங்குவதற்குண்டான அடித்தளமாக இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். இதற்கான விழாவில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலிருந்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய விஜய், ‘உன்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, […]

Continue reading …

உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நிதிச் சேவைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்திடும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன். பெரும் தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் அவர்கள் மிக முன்பாகவே தகவல் தொழில்நுட்பத்துறையின் […]

Continue reading …

விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

Comments Off on விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

இன்று நடைபெற்ற கல்வி விழாவில், “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை” என்று நடிகர் விஜய் பேசினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்” என தனது கருத்தை கூறியுள்ளார். நடிகர் விஜய் இன்று நடைபெற்ற கல்வி விழாவில் 10 நிமிடம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம், உங்கள் […]

Continue reading …

முதலமைச்சரைப் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகி கைது!

Comments Off on முதலமைச்சரைப் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகி கைது!

அதிமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சரை பற்றி அவதூறான வீடியோ பரப்பிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவிட்டதற்காக நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஈரோடு […]

Continue reading …

பிரபாஸ் படத்தை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

Comments Off on பிரபாஸ் படத்தை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

இன்று உலகம் முழுதும் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆதிபுருஷ்.” இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படத்தை பார்த்த நெட்டிசங்கல் படுமோசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படுமோசமான விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதில், […]

Continue reading …

‘கருணாநிதி நாடு’ மாற்றுவாரா ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்

Comments Off on ‘கருணாநிதி நாடு’ மாற்றுவாரா ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழ்நாட்டுக்கு “கருணாநிதி நாடு” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய அவர் “மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கிறார், சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர், தற்போது கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் கருணாநிதி பெயர் இப்படியே போனால் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்று மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. கருணாநிதி பெயரை மட்டுமின்றி மற்ற தலைவர்களின் […]

Continue reading …