Home » Entries posted by Shankar U (Page 261)
Entries posted by Shankar

கர்ணனனாக நடிக்கும் சூர்யா?

Comments Off on கர்ணனனாக நடிக்கும் சூர்யா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில், “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் “கங்குவா.” இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் 44வது படம் பற்றிய தகவல் வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா […]

Continue reading …

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக படத்திற்கு பிரேக்?

Comments Off on விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக படத்திற்கு பிரேக்?

சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, […]

Continue reading …

அமைச்சர் அறையில் சோதனை; கிண்டலடித்த அதிமுக!

Comments Off on அமைச்சர் அறையில் சோதனை; கிண்டலடித்த அதிமுக!

அதிமுக கட்சியின் ஐடி விங் டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிடப்பட்ட பதிவில், “அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு […]

Continue reading …

குழந்தைத் தொழிலாளர்கள்- குறித்து எடப்பாடி டுவிட்

Comments Off on குழந்தைத் தொழிலாளர்கள்- குறித்து எடப்பாடி டுவிட்

எடப்பாடி பழனிசாமி “சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடமிருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார். இன்று குழந்தைத் தொழிலாளார் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை […]

Continue reading …

முன்னாள் அமைச்சரின் கேள்வி

Comments Off on முன்னாள் அமைச்சரின் கேள்வி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றின் போது, “திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத […]

Continue reading …

ரயில் நிலைய விரிவாக்க பணி: அவசர வழக்காக விசாரிக்க அனுமதி!

Comments Off on ரயில் நிலைய விரிவாக்க பணி: அவசர வழக்காக விசாரிக்க அனுமதி!

சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன முறையில் விரிவுபடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]

Continue reading …

பாடகர் வீட்டில் நகைகள் கொள்ளை?

Comments Off on பாடகர் வீட்டில் நகைகள் கொள்ளை?

பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தது. விசாரணையின் முடிவில் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது, பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், மார்ச் 30ம் தேதிதான் புகாரளிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் கழித்து புகாரளித்தது குறித்து போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். மேலும் நகைகள் திருட்டு என பொய் புகாரளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க […]

Continue reading …

ஒரு ஷோ ஓடினாலே வெற்றிவிழாதான்; சுந்தர் சி!

Comments Off on ஒரு ஷோ ஓடினாலே வெற்றிவிழாதான்; சுந்தர் சி!

தலைநகரம் திரைப்படம் 2006ம் ஆண்டு சுந்தர் சி நடிகராக அறிமுகமானது. இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது. இப்போது படத்தின் டிரெயிலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டிரெயிலரைப் பார்க்கும் போது தெரிகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், பேசிய சுந்தர் சி “இயக்குனர் துரையோடு நான் இணைந்து பணியாற்றிய இருட்டு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த […]

Continue reading …

அர்ஜுன் தாஸ் படத்தின் அப்டேட்!

Comments Off on அர்ஜுன் தாஸ் படத்தின் அப்டேட்!

நடிகர் அர்ஜுன் தாஸ் “கைதி” திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். பின் “மாஸ்டர்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த “அந்தகாரம்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீசான “விக்ரம்” திரைப்படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் “அநீதி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி […]

Continue reading …

அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

Comments Off on அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
அண்ணாமலை தகுதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “உலகம் முழுவதும் உள்ளள 10 கோடிக்கும் மேலுள்ள நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்கள். உலகம் முழுவதும் போற்றக்கூடிய தலைவர். எல்லா சாலைகளும் போயஸ் கார்டன் நோக்கி என்ற வகையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர்கள், பாஜக தலைவர்கள் […]

Continue reading …