
இன்று மாலை “மாவீரன்’’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படம் உருவாகி உள்ளது. இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (மாவீருடு) மொழியில் தயாராகி வருகிறது. படத்தில், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிடோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தர மாட்டோம்” என்று கூறியுள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]
Continue reading …
ரூ.52 லட்சத்தை வீடியோ கேம் மீதான மோகத்தில் சிறுமி ஒருவர் காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே கேமிங் மோகம் தலை விரித்தாடுகிறது. தீவிரமாக நாள் முழுவதும் கேம் விளையாடுவதால் பலர் உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த சிறுமி மொபைல் கேம் விளையாடுவதில் தீவிர மோகத்தில் இருந்து வந்துள்ளார். புதிய கேம்களை வாங்குவதற்காகவும், கேமில் உள்ள கேட்ஜெட்களை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை […]
Continue reading …
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டண உயர்வ- குறித்து அறிவித்த நிலையில், தற்போது வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த விதமான மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிக குறைந்த அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் கூறியுள்ளது. மற்ற மாநிலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் […]
Continue reading …
புதிதாக மலேசியாவில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை கோலாலம்பரியில் உள்ள பிரிக்பீல்ட் என்ற பகுதியில் கட்டியுள்ளனர். பிரம்மாண்டமாகவும் அழகிய வேலைபாடுகளுடன் உள்ள இந்த கோவில் இரண்டு தளங்களைக் கொண்டது. முதல் தளத்தில் அனுமன் சன்னதி மற்றும் இரண்டாவது தளத்தில் நூலகம், தியான அறை அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]
Continue reading …
டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டமும் தெரிவித்தனர். ஆலங்குளம் நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.5 கூடுதலாக வசூலித்த விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் அக்கடையில் ரூ.260 மதிப்புள்ள மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.265க்கு ரசீது கொடுத்துள்ளார். மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விஜயகுமார் வாட்ஸ் ஆப் மூலம் […]
Continue reading …
நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிப்பது பெருமை என்று தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி” யின் 2 பாகத்தின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ். இதன் மூலம் பிரபாஸ் இந்தியா முழுதும் பிரபலமானார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …
சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “அறம்.” இப்படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கை சேர்ந்த பெண் தொழிலதிபர் சியாமளா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அப்புகாரில், “அறம்“ படத்தை இயக்கிய கோபி நயனார், புதிதாக ஜெய் நடிப்பில் “கருப்பர் நகரம்“ படத்தை இயக்கவுள்ளதாக என்னிடம் கூறினார். இதை ஒரு தயாரிப்பாளரும் உறுதிப்படுத்தினார். எனவே, […]
Continue reading …