
முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. முக்கிய பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் நடப்பு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், இன்று அவர் ஆஜராகவுள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகான பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆண்டு பொதுத்தேர்வுகள் நடந்து முடியவுள்ள நிலையில் விரைவில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் அனைத்து […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “சிறுத்தை” சிவா இணையும் திரைப்படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. “சிறுத்தை” சிவா இயக்குகிறார் என்றதும் கிராமத்து கதையாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரச காலத்து கதை போன்ற மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திரைப்படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. “சிறுத்தை” சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், […]
Continue reading …
ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி சூடான் நாட்டில் நடந்து வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடையே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் போராக வெடித்துள்ளது. சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை […]
Continue reading …
வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் தன் சொந்த மகனை தந்தையே துள்ளத் துடிக்க கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலுள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 25 வயதான மகன் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கும் […]
Continue reading …
அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள டான்வில்லி பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் […]
Continue reading …
கே.எஸ்.அழகிரி அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீட்டு வாடகை உள்பட வீட்டு செலவுக்கு தனது நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது “50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் […]
Continue reading …
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் தற்போது மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் கொரோனா தொற்றால் கமலேஷ் 2021ம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த […]
Continue reading …
சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “சிங்கப்பூர் சலூன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Continue reading …