Home » Entries posted by Shankar U (Page 302)
Entries posted by Shankar

தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

Comments Off on தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில் கடந்த சில நாட்களாக ஓரிரு உயிர்கள் பலியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவால் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தனர். நேற்றும் ஒருவர் பலியானார். இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே […]

Continue reading …

சட்டையை கழட்டிய நடிகர் சல்மான்கான்!

Comments Off on சட்டையை கழட்டிய நடிகர் சல்மான்கான்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். தற்போது, “கிசி காகி சி கி பாய் ஜான்’’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ்க் கில், வெங்கடேஷ், பாலக் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “வீரம்” திரைப்படத்தின் இந்தி ரீமேக். படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. […]

Continue reading …

250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

Comments Off on 250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன்னுடைய 250 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த முரளி கிருஷ்ணா திருப்பதி ஏழுமலையான் பக்தர். அவர் தன்னிடம் உள்ள விவசாய நிலமான 250 ஏக்கரை ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளார்.இதற்கான ஆவணங்களை அவர் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]

Continue reading …

கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

Comments Off on கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான தெருநாய்கள் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்ததையடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் […]

Continue reading …

சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

Comments Off on சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை […]

Continue reading …

“வணங்கான்” அப்டேட் கொடுத்த வைரமுத்து!

Comments Off on “வணங்கான்” அப்டேட் கொடுத்த வைரமுத்து!

“வணங்கான்” திரைப்படத்திலிருந்து நகடிர் சூர்யா விலகிய நிலையில் படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அருண் விஜய் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார் பாலா. படத்துக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்டதால் இப்போது ஆர்.பி. குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம். கதாநாயகியாக ரோஷினி ராஜபிரியன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது மீண்டும் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் பாடல்கள் பற்றி இயக்குனர் பாலாவோடு […]

Continue reading …

மருமகளை கொலை செய்த மாமனார்!

Comments Off on மருமகளை கொலை செய்த மாமனார்!

நெல்லையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தங்கராஜின் மனைவி உயிரிழந்ததால் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் […]

Continue reading …

செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

Comments Off on செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

செவிலியர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரையடுத்த வற்றாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா (32). இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற ஒரு மகன்கள். சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறு பாட்டால் தகராறு எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த […]

Continue reading …

தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்!

Comments Off on தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்!

கிரிக்கெட் வீரர் தோனி புதியதாக திரைப்பட நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அந்நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது. “எல்ஜிஎம்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட்டோர் நடிக்கவுள்ளனர். படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக […]

Continue reading …

முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

Comments Off on முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரவி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. […]

Continue reading …