Home » Entries posted by Shankar U (Page 308)
Entries posted by Shankar

ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்!

Comments Off on ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்!

ஓடும் ரயிலுக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த ரயில் கோழிக்கோடு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அதில் பயணித்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை ரயிலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை கண்டு அலறிய பயணிகள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். சிலர் செயினை […]

Continue reading …

தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

Comments Off on தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பழைய டெம்ப்ளேட்டுகளையே தென்னிந்திய சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர். சினிமாவில் நடிகர் ராகுல் தேவ்வுக்கு பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவர் தமிழில் நடித்த “நரசிம்மா,” “ஆதவன்,” “வேதாளம்” மற்றும் “லெஜண்ட்” என அனைத்து படங்களிலும் வில்லன்தான். அவர் தென்னிந்தியா சினிமாக்களின் கதை சொல்லும் பாணி குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 70 மற்றும் 80களின் டெம்ப்ளேட்டையே படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாத ஆக்‌ஷன் காட்சிகளையே […]

Continue reading …

ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

Comments Off on ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். “ஜவான்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. தற்போது ஷாருக் கானின் “பதான்” படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் “ஜவான்” படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். ஜூன் 2ம் தேதி படம் […]

Continue reading …

நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

Comments Off on நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]

Continue reading …

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

Comments Off on நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “இனிய நண்பர்களே நாங்கள் எங்களுடைய […]

Continue reading …

ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை!

Comments Off on ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஏப்ரல் 18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். ஏப்ரல் 18ம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருச்சி […]

Continue reading …

பிரதமர் மோடி தமிழகம் வருகையால் டிஜிபி ஆலோசனை!

Comments Off on பிரதமர் மோடி தமிழகம் வருகையால் டிஜிபி ஆலோசனை!

டிஜிபி பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Continue reading …

காரைக்கால் கலெக்டரின் உத்தரவு!

Comments Off on காரைக்கால் கலெக்டரின் உத்தரவு!

காலைக்கால் கலெக்டர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காரைக்காலைச் சேர்ந்த 35 வயது பெண் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த மருத்துவர்கள், இணை நோய்கள் அவருக்கு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கமளித்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் ஒன்றரை ஆண்டிற்குப் பின் கொரொனா […]

Continue reading …

சிலிண்டர் விலை ரூ.76 குறைவு!

Comments Off on சிலிண்டர் விலை ரூ.76 குறைவு!

மாதம் 1ம் தேதியானால் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கமாகி விட்டது. அவ்வகையில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2,268 என விற்பனையாகி வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று முதல் 76 குறைந்து 2012 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்களுக்கு உபயோகப்படுத்தப்படும் […]

Continue reading …

லாரி உரிமையாளர் போராட்டம்!

Comments Off on லாரி உரிமையாளர் போராட்டம்!

இன்று தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண […]

Continue reading …