
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற “விடுதலை” திரைப்படத்தின் வெற்றியை பக்காவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கலைப்புலி தாணு மிஷ்கினுடன் படத்தை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி இயக்குனரான மிஷ்கின் இப்போது “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் […]
Continue reading …
7 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. இவர் “நேரம்“ மற்றும் “பிரேமம்“ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். “கோல்டு” திரைப்படம் எவ்வித புரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பின. விமர்சனங்களைக் கடந்து செல்லாமல் அதற்கு பதிலளிக்கிறேன் […]
Continue reading …
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெற்றதையடுத்து இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டடை அடுத்து இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளிலும் ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் உயர்த்தப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர். ஆனால் சற்று முன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் […]
Continue reading …
ஆபாச நடிகை ஸ்டார்மி முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க ஸ்டார்மிக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். நடிகை ஸ்டார்மி, டிரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து […]
Continue reading …
ஆண்டுதோறும் சார் தாம் யாத்திரை எனப்படும் புனித யாத்திரை இம்மாதம் தொடங்கவுள்ளது. பக்தர்கள் இந்த யாத்திரைக்காக தயாராகி வருகின்றனர். புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் கோவில்களுக்கு தல யாத்திரை செல்வது வழக்கம். நாட்டின் 4 புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். ஒரு ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே இந்த புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பனிக்காலங்களில் புனித தலங்களை பனி மூடிவிடுவதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. […]
Continue reading …
ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை […]
Continue reading …
ரயிலுக்கு தீ வைத்து தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கண்ணூர் இடையே சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் திடீரென நபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி ரயிலுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை […]
Continue reading …
தீர்த்தவாரி குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். நேற்று சென்னை அருகே மூவரசம்பட்டியிலுள்ள குளம் ஒன்றில் 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார். சென்னையை அடுத்த மூவரசம்பட்டியிலுள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது. […]
Continue reading …
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவர் தங்கியிருந்த பங்களாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். துணை […]
Continue reading …
வங்கி ஊழியர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடுத்தெருவில் பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் வங்கி ஒன்றில் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதையடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து வங்கி […]
Continue reading …