Home » Entries posted by Shankar U (Page 320)
Entries posted by Shankar

அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமேசான் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. ஆனால், தற்போது மீண்டும் 9000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில பிரிவுகளில் உள்ள ஊழியர்களை வரும் ஏப்ரல் மாதம் வேலை நீக்கம் செய்ய இருப்பதாகவும் ஒன்பதாயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன்டிஜேசி தெரிவித்துள்ளார். இத்தகவல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை […]

Continue reading …

பேருந்து நடத்துனர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

Comments Off on பேருந்து நடத்துனர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

அரசுப் பேருந்தின் நடத்துனர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இன்று பிற்பகல் குமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் நாகர்கோவில் அருமனையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பவர் நடத்துனராகவும் பேச்சிப்பறையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்பவர் டிரைவராகவும் பணியில் இருந்துள்ளனர். பேருந்து வள்ளியூரை கடந்து வாகைகுளம் அருகே வரும் பொழுது நடத்துனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கிய அவர் சரிந்து […]

Continue reading …

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய திட்டம் அறிமுகம்!

Comments Off on பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய திட்டம் அறிமுகம்!

புதிதாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி எண் மற்றும் அதிவேக இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி இச்சலுகைத் திட்டத்தில், 6 மாதங்கள் வரை கட்டணத்தில் ரூ.200 தள்ளுபடி செய்யப்படும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு 6 மற்றும் 12 மாத சந்தா செலுத்தினால் வைபை ஆப்டிகல் மோடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் நிறுவுவதற்கான கட்டணம் ரூ.500 ரத்து செய்யபப்டும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பில் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் […]

Continue reading …

வைரஸ் நோய் பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on வைரஸ் நோய் பற்றி அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் பரவி வரும் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 வகை வைரஸ்; பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமிக்ரான் எக்ஸ்பிபி, பிஏ2 ஆகிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை […]

Continue reading …

முதலமைச்சரின் உகாதி வாழ்த்து!

Comments Off on முதலமைச்சரின் உகாதி வாழ்த்து!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடக்கூடிய உகாதி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22.3.2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்கல் புத்தாண்டை வரவேற்கும் உள்ளது இல்லத்திலும், வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றேன்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன். தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட […]

Continue reading …

ஹீரோவாகும் நடிகரின் தம்பி?

Comments Off on ஹீரோவாகும் நடிகரின் தம்பி?

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான “கட்டா குஸ்தி” மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார் விஷ்ணு விஷால். இடையில் தான் நடித்த சில படங்களை தயாரிக்கவும் செய்தார். தற்போது தன்னுடைய தம்பி ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளாராம். தம்பி நடிக்கும் படத்துக்காக இப்போது கதைக் கேட்டு வரும், அந்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continue reading …

சகோதரரை வெட்டிக் கொன்ற தங்கை!

Comments Off on சகோதரரை வெட்டிக் கொன்ற தங்கை!

8 ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த சகோதரரை 20 துண்டுகளாக வெட்டிக் கொன்றது தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2015ம் ஆண்டு பாகியஸ்ரீயின் செயலை அவரது சகோதரன் லிங்கராஜ்(22) கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பாக்கியஸ்ரீ தன் கள்ளக்காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, ஒரு நாள் பாக்யஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து, லிங்கராஜை அடித்துக் கொன்றனர். இது தெரியக்கூடாது என்பதற்காக, அவரது உடலை சுமார் 20 துண்டுகளாக வெட்டி, அதை 3 […]

Continue reading …

ரஜினி மகள் வீட்டில் திருடியவர் கைது!

Comments Off on ரஜினி மகள் வீட்டில் திருடியவர் கைது!

ரஜினி மகளான சொந்தர்யா வீட்டில் திருடியவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை உள்பட ஆபரணங்கள் திருட்டு போனது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது ரஜினி மகள் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. […]

Continue reading …

புதுவை முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on புதுவை முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

புதுசை முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியர்கள் தற்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊழியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 5000 ரூபாய் உயர்த்தப்படும் என்றும் இனி அவர்கள் 15000 என ஊதியம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணி துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்து முதலமைச்சர் ரங்கசாமிக்கு தங்களது நன்றியை […]

Continue reading …

பத்மாவதி தாயார் கோவிலில் மக்கள் கூட்டம்!

Comments Off on பத்மாவதி தாயார் கோவிலில் மக்கள் கூட்டம்!

சமீபத்தில் சென்னையில் தியாகராய நகரில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் 41 நாட்கள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய […]

Continue reading …