
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலையை தடுக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. சென்னை கல்லூரியில் படிக்கும் 24 வயது மாணவர் ஆன்டோ ஜாய் என்பவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக […]
Continue reading …
சமூக வலைதளமா யூடியூப் இணையதள சேவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கிப் போனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் அனாலிடிக்ஸ் ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கி உள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ள நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு படிப்படியாக இயங்கி வருகிறது […]
Continue reading …
வானியல் நிபுணர்கள் வானில் நடக்கும் அதிசய வானவியல் நிகழ்வுகளில் ஒன்றான 5 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். விண்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் மிகவும் அரிதான சில வானியல் நிகழ்வுகளும் அவ்வபோது நடைபெறுகின்றன. சூரிய குடும்பத்தில் பூமியை போன்றே பெரியதும், சிறியதுமான 9 கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுவட்ட பாதையை பொறுத்து சுழலும் காலமும் மாறுபடும். இதனால் வெகு அரிதாகவே இந்த கிரங்கள் ஒரே நேர்கோட்டில் […]
Continue reading …
மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர் ஆசியா என்ற விமானம் சென்னை அருகே பறந்து கொண்டிருந்ததையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சென்னையில் கோலாலம்பூர் ஏரி ஏசியா விமானம் தரையிறக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட பயணி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு […]
Continue reading …
கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியார் பெனடிக் ஆன்றோ வழக்கில் விசாரணைக்கு வரவேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கன்னியாக்குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (27). அவர் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் மற்றும் வீடியோ காலிங் பேசியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. பேச்சிப்பாறை பகுதியில் வசித்து வரும் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் […]
Continue reading …
உயர்நீதிமன்ற மதுரை கிளை விருதுநகர் மாவட்டத்தில் மதுபானக்கடையை அகற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கில் மதுபானம் அத்தியாவசிய பொருளா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலூக்காவிலுள்ள வாகைக்குளம் கிராமத்தில் இயங்கி வருகின்ற மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுக்கடையைச் சுற்றிலும் பல வீடுகள், பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிதிது வருவதால், மோதல் ஏற்படுவதாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறுவர்கள், பெண்கள் […]
Continue reading …
சென்னை வானிலை மையம் இன்னும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என […]
Continue reading …
தென்னக ரயில்வே ஓய்வு பெற்றவர் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களின் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அதாவது ஏடிவிஎம் இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வழங்கும் பணிக்காக கீழ்க்கண்ட இடங்களில் வசிக்கக்கூடிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: மதுரை […]
Continue reading …
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். “இலங்கைக் கடற்படையினரால் இன்று (23- 3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை […]
Continue reading …
இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத்துக்கு “பில்லா” மற்றும் “ஆரம்பம்“ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். மீண்டும் அஜீத் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அப்படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். விஷ்ணுவர்தன், ஏற்கனவே ஒத்துக்கொண்ட படத்தை தற்போது தொடங்கியுள்ளார். மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடிகர் முரளியின் இளையமகன் அகில் நடிக்கும் இந்த படத்தை […]
Continue reading …