Home » Entries posted by Shankar U (Page 328)
Entries posted by Shankar

தமிழகத்தில் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

Comments Off on தமிழகத்தில் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழக அரசு இந்த காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் முதல்முறையாக இன்புளுயன்சா காய்ச்சலுக்கு […]

Continue reading …

மடகாஸ்கரில் படகு கவிழ்ந்து விபத்து!

Comments Off on மடகாஸ்கரில் படகு கவிழ்ந்து விபத்து!

படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 அகதிகள் உயிரிழந்த சம்பவம் மடகாஸ்கர் அருகே உள்ள மயோட் ஆற்றுப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. மடகாஸ்கரிலிருந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவான மாயோட்டிற்குச் செல்லும் வழியில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 22 அகதிகள் உயிரிழந்தனர். இப்படகில் 47 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில், மடகாஸ்கர் வடக்கே அங்கொம்பொரோன என்ற கடல் பகுதியில் செல்லும்போது, கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இரவு 1 மணியளவில் அம்பிலோப் அங்கொம்பொரோனாவில் மீனவர்கள் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்றபோது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவாதாக அறிவித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இத்திட்டம் எப்போது அமலுக்கு வருமென்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்கட்சிகளும் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் […]

Continue reading …

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Comments Off on அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதினர். செமஸ்டர் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு […]

Continue reading …

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லையா?

Comments Off on 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் +2 தேர்வு எழுதவில்லையா?

பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் 50,674 மாணவ மாணவிகள் +2 தேர்வு எழுதவில்லை என பள்ளி அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இன்று 2022&-23ம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் […]

Continue reading …

பாஜக தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

Comments Off on பாஜக தொண்டர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

பாஜக தொண்டர் வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் பாஜக தொண்டர் சந்தோஷ் வீட்டில் சமையலறையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் சந்தோஷ் கையில் மட்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து விசாரணை செய்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]

Continue reading …

ஆவேசமான டி.ஆர்.பாலு!

Comments Off on ஆவேசமான டி.ஆர்.பாலு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசிய பிறகு அளித்த பேட்டியில், “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல. ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் […]

Continue reading …

ராம்சரண் நடிப்பில் ஷங்கர் படத்தின் தலைப்பு என்ன?

Comments Off on ராம்சரண் நடிப்பில் ஷங்கர் படத்தின் தலைப்பு என்ன?

நடிகர் ராம்சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் இணையும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி5” படத்தையும் இயக்கி வருகிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இத்திரைப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு “சிஇஓ” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் […]

Continue reading …

“பிரசிடெண்ட்” திரைப்படத்தின் அப்டேட்!

Comments Off on “பிரசிடெண்ட்” திரைப்படத்தின் அப்டேட்!

நடிகர் கருணாஸ் தயாரிப்பில் அரசியல் நய்யாண்டி படமாக உருவாகி வருகிறது “பிரசிடெண்ட்” திரைப்படமாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ். இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர். கென் “அசுரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள நிலையில் சமீபத்தில் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது. சினிமாவிலிருந்து சிறிது […]

Continue reading …

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே […]

Continue reading …