
காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார் காதலன். இக்கொடும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தீயில் கருகிய அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் பூஜா என்பவரை காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பூஜாவை லோகேஷ் வலியுறுத்தியுள்ளார். பூஜா திருமணத்திற்கு மறுத்ததால் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். 80 சதவீத […]
Continue reading …
நடிகர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “முகமூடி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது “பீஸ்ட்” திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது சல்மான் கானுடன் “கிசி கா […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 67 திரைப்பத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இத்திரைப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. “மாஸ்டர்” திரைப்படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Continue reading …
மத்திய சுகாதார அமைச்சகம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது. இதன் 5ம் அலை விரைவில் பரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் தற்போது பிஎப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
Continue reading …
சில தினங்களுக்கு முன் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முந்தைய தினங்கள் விடுமுறையாக இருப்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு 12, 13ம் தேதிகளிலேயே புறப்பட தயாராகி வருகின்றனர். சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லவிருப்பதால் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களிலும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட […]
Continue reading …
ஆளுநர் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என பேசியதற்கு எதிராக டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இவரது பேச்சு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயர் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே […]
Continue reading …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் ரீலீசாவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. “துணிவு” திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆனால் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் குழப்ப நிலையில் இருந்தனர். ஒரு சிலர் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகுமென்றும், சிலர் ஜனவரி 12ம் தேதி வெளியாகுமென்றும் கூறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணிவு” திரைப்படம் […]
Continue reading …
ஜப்பான் அரசு தலைநகர் டோக்கியோவை விட்டு புறநகர் பகுதிக்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதை அடுத்து நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை கணக்கில் கொண்டு ஒரு குழந்தையுடன் உள்ள ஒரு குடும்பம் நகரத்தை விட்டு அல்லது கிராமத்திற்கு சென்றால் ஒரு மில்லியன் பரிசு அளிக்கப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஒரு மில்லியன் […]
Continue reading …
இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் […]
Continue reading …