Home » Entries posted by Shankar U (Page 504)
Entries posted by Shankar

மெரீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on மெரீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மெரினாவில் பொதுமக்கள் இனிமேல் குளிக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் தடையை மீறி பலர் குளித்து வருகின்றனர். அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குளிக்கக் கூடாது என்று காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த போதிலும் ஒவ்வொரு மாதமும் மெரினாவில் குளிப்பதால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது […]

Continue reading …

ஓலா நிறுவன பணியாளர்கள் நீக்கமா?

Comments Off on ஓலா நிறுவன பணியாளர்கள் நீக்கமா?

ஓலா நிறுவனம் அதில் பணிபுரியும் ஊழியர்கள் 500 பேரை வேலைநீக்கம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓலாவின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து செலவுகளை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்களின் லிஸ்ட்டையும் கணக்கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஓலா நிறுவனம் […]

Continue reading …

கடும் குளிருக்குள் தமிழகமா?

Comments Off on கடும் குளிருக்குள் தமிழகமா?

தமிழகத்தில் கடும் குளிராக இருக்கும் என்று எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என சென்னை வானிலை மையம் விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது இன்றும் நாளையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவும் என்று சமூக வலைதளங்களில் செய்தி […]

Continue reading …

தோனிக்கு விநோத பிறந்த நாள் பரிசு!

Comments Off on தோனிக்கு விநோத பிறந்த நாள் பரிசு!

எம்.எஸ்.தோனியின் பிறந்த நாளான இன்று அதை கொண்டாடும் விதமாக வீடு ஒன்றை ரசிகர் தயார் செய்துள்ளார். எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியை பல்வேறு சாதனைகள் படைக்க செய்தவர். தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழகத்தில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இன்று தோனி […]

Continue reading …

ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

Comments Off on ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் […]

Continue reading …

கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!

Comments Off on கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!
கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 62% பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்து வந்தனர். கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் […]

Continue reading …

இந்தியாவில் புதிய வகை கொரோனா!

Comments Off on இந்தியாவில் புதிய வகை கொரோனா!

கொரோனா தொற்று நோய் கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் பரவியது. இதன் பாதிப்பிலிருந்து மக்கள் வெளிவர தொடங்கிய போது இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் உருவாகியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் ஏபி.2.75 என்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய வைரஸ் தோன்றினால், அது முந்தைய வைரஸை விட வித்தியாசமாக இருக்குமானால் அது தனி மாறுபாடு […]

Continue reading …

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

Comments Off on லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் இரும்பு பட்டைக்குள் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் படுக்காயம் இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது! சென்னையில் இருந்து 20க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் […]

Continue reading …

தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!

Comments Off on தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னசாந்திபுரம் மலை கிராமத்தை சேர்ந்த மொக்கை என்பவர், தனது மகள் ஆண்டிச்சியம்மாள், தனது பேத்தி காவியா இறப்பிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்றுமுன்தினம் வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகள் ஆண்டிச்சியம்மாள் கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் ( 29) என்பவரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கினார். அந்த கடனுக்காக அடைக்கலம் நடத்தி வந்த பால் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் யூட்யூப் சேனல்!

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் யூட்யூப் சேனல்!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அவரது பெயரில் மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். நீண்டகாலமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலோ, சமூக வலைதள கணக்குகளோ இல்லாமல் இருந்தது. இன்று தளபதி விஜய் […]

Continue reading …