Home » Entries posted by Shankar U (Page 539)
Entries posted by Shankar

நட்டி நட்ராஜ் டுவிட்டரில் மகிழ்ச்சி பதிவு!

Comments Off on நட்டி நட்ராஜ் டுவிட்டரில் மகிழ்ச்சி பதிவு!

நடிகர் நடராஜன் இலங்கையில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் அதைப்பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்சே குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் […]

Continue reading …

தமிழக அரசு அரிசி கொள்முதல் செய்ய தடையில்லை!

Comments Off on தமிழக அரசு அரிசி கொள்முதல் செய்ய தடையில்லை!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக அரிசி கொள்முதல் செய்வதை தடை செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்து அனுப்ப உள்ளதாக முதலமைச்சர் […]

Continue reading …

உலகநாயகன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்

Comments Off on உலகநாயகன் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் “விக்ரம்”. தற்போது திரைப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.   இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஜுன் மாதம் 3ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் […]

Continue reading …

உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

Comments Off on உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடுத்த கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்தது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என்று […]

Continue reading …

போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

Comments Off on போலி சான்றிதழ் விவகாரம், 7 பேர் மீது வழக்குபதிவு!

போலியாக சான்றிதழை பயன்படுத்தி பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்த 7 பேரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 நபர்கள் திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர். இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை அனைத்தும் போலியென தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை அரசு வாகனங்கைள தவிர மற்ற பிற வாகனங்களில் G, அ எழுத்துகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.   அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது […]

Continue reading …

ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

Comments Off on ஸ்டெர்லைட் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என பேட்டி அளித்துள்ளனர். ஆலையிலிருந்து அதிகமாக வெளிவரும் மாசு காரணமாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள் என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு […]

Continue reading …

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

Comments Off on தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

நாளை மாலை முதல் தூத்துகுடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை முதல் 15ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று கூறினார். இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

Comments Off on பெண்களால் மூடப்பட்ட டாஸ்மாக்

பெண்களாக சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 3 வது டாஸ்மாக் கடையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாகச் சென்று டாஸ்மாக் கடையை இழுத்து மூடினர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

Continue reading …

தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

Comments Off on தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!
தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில கடலில் […]

Continue reading …