Home » Entries posted by Shankar U (Page 549)
Entries posted by Shankar

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

Comments Off on புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]

Continue reading …

புதிய தேதியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வா?

Comments Off on புதிய தேதியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வா?

வருகின்ற ஜூன் 26-ம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது, மேலும் ஜூன் 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே […]

Continue reading …

சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

Comments Off on சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக வரும் காலங்களில் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

மீண்டும் படையப்பா – நீலாம்பரி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Comments Off on மீண்டும் படையப்பா – நீலாம்பரி! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய சுவாரஸ்யங்கள் கசிந்துள்ளது.   “பீஸ்ட்” திரைப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.   இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக […]

Continue reading …

நெட்டிசன்களுக்கு சமந்தா எச்சரிக்கை!

Comments Off on நெட்டிசன்களுக்கு சமந்தா எச்சரிக்கை!
நெட்டிசன்களுக்கு சமந்தா எச்சரிக்கை!

நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்பு அவரைக் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தததால் தான் அவர் கணவைப் பிரிந்தார் என்று தெலுங்கு சமூக வலைதளங்கள் அவதூறு பரப்புவதாக நீதிமன்றம் சென்றார். பின்னர், விஜய் தேவரகொண்டாவின் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்ந்தா பட பூஜையில் கலந்துகொள்ளாததற்கும் அவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது, காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்ததை ஒப்பிட்டு சமந்தாவை […]

Continue reading …

சச்சின் மகள் கதாநாயகி ஆகிறார்!

Comments Off on சச்சின் மகள் கதாநாயகி ஆகிறார்!

பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகிறார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இருப்பினும் சாராவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவரது சமூகவலைதளப பக்கங்களில் சினிமாவை மையப்படுத்திய சுயவிவரங்கள் இருக்கின்றன. எனவே, 2021ம் ஆண்டு சாரா மாடலிங்கில் நுழையும்போது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. தற்போது அவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரபல நடிகர் ஷாகித் […]

Continue reading …

ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!

Comments Off on ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!
ஐஐடியில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா!

சென்னை ஐஐடியில் இன்று ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Continue reading …

டாடா நிறுவனம் மின்சார பேருந்தின் டெண்டரை கைப்பற்றியது

Comments Off on டாடா நிறுவனம் மின்சார பேருந்தின் டெண்டரை கைப்பற்றியது

டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் மின்சார ஏசி பேருந்துகள், மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள், சாதாரண சாதாரண என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 460 பேருந்துகளுக்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரில் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் கிடைத்துள்ளதாக தகவல் […]

Continue reading …

புதியதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

Comments Off on புதியதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலைக்கழகம் தவிர அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில் புதிதாக தொடங்கப்படும் […]

Continue reading …

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு ஏற்றம்!

Comments Off on உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு ஏற்றம்!

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் உதவி இல்லாமல் உலக பிரச்சனையை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே உறவை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் உலகில் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என ஜெர்மனி அமைச்சர் கூறியதை உலக நாடுகளில் பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue reading …