நேற்று நடைபெற்ற 31வது ஐபிஎல் கிரிக்கெட்டில் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இதில் பெங்களூரு அணி மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ மிகவும் போராடிய நிலையில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தன. கேப்டன் டுபிளஸ்சிஸ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ […]
Continue reading …நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 100 நாட்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தாரர்களின் எண்ணிக்கை 2 லட்சம் அளவில் குறைந்துள்ளது. அதிக அளவில் இந்தியாவில் மக்களிடையே உபயோகத்தில் இருக்கும் ஓடிடியாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. பலதரப்பட்ட படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்பிளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் முறைகளில் மாற்றம் செய்தது. நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் […]
Continue reading …13 வயது சிறுமியை ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி 80 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் 13 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் தன் தாய், தந்தையரோடு வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் தாய் உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் தந்தையோடு வசித்து வந்துள்ளார் சிறுமி. சிறுமியின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பழக்கமான சொர்ணகுமாரி என்பவர் சிறுமியை தத்தெடுத்துக் கொள்வதாக சிறுமியின் […]
Continue reading …இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா. இவர் 1500க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடி அண்ணல் அம்பேத்கருக்கு நிகரானர் என இசைஞானி இளையராஜா புகழ்ந்து ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதிய நிலையில், மோடி, இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “மோடியும் அம்பேத்கரும்“ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, “இந்தியா தற்போது, கல்வித்துறை, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது. […]
Continue reading …யூகேஜி படித்து வரும் மாணவன் சரியாக படிக்கவில்லை என்பதற்காக அவனை தாக்கிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வரும் மாணவர் சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவனின் தாயார் சமூகவலைதளத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யூகேஜி மாணவனை அடித்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் இரண்டு […]
Continue reading …வருடாவருடம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இத்திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று சூழல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கூத்தாண்டவர் கோயிலின் முக்கிய நிகழ்வான மிஸ் கூவாகம், தாலி கட்டிகொள்ளும் நிகழ்வு, தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் […]
Continue reading …12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நாளை 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும், மதியம் 2 மணிக்கு மேல், இதை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து […]
Continue reading …காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வால் தன்னுடைய கர்ப்ப கால போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் பரிமாறி வருகின்றனர். காஜல் அகர்வால் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் […]
Continue reading …ஆப்கானிஸ்தானின் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் இன்று 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இதில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இப்பகுதியில் ஹிஷா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் இதுபோன்ற தாக்ககுதல் நடத்தப்பட்டு வருவதாகவும கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு வெடித்ததில் […]
Continue reading …கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் “அகண்டா.” தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு […]
Continue reading …