உலக நாடுகளிலிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியது கொடிய நோயான கொரோனா. 2020ம் ஆண்டிலிருந்து இன்று வரை இதன் பாதிப்பால் பெருமளவில் பொருளாதாரத்திலும், உயிரிழப்பையும் சந்தித்திருக்கிறோம். இந்த ஆண்டில் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த கொரொனா இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் இனி தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என தமிழக […]
Continue reading …தேசிய தேர்வு முகமை இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEED-UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17ல் நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Continue reading …பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக 1000 சிறப்புகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு, 14ம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17ம் தெதி வார இறுதி நாட்கள் சனி ஞாயிறு […]
Continue reading …அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேப்டாப் மற்றும் சான்றிதழ் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது: தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும், மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில் நீட்டை தமிழகத்திற்குள் நுழையவிடல்லை. ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Continue reading …Tata Neu என்ற செயலியை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே செயலியின் வாயிலாகப் பயனர்கள் பல அம்சங்களைப் பெறுவார்கள். ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. இதில் மளிகை, டிக்கெட்டிங், உணவு விநியோகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் இதில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கும் வசதியும் உள்ளது. Tata Digital நிறுவனம் கடந்த பல மாதங்களாக இந்த செயலியின் வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூப்பர் […]
Continue reading …பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் இம்ரான் கானை நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் […]
Continue reading …சமூகவலைதளத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” படம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இதையடுத்து அவர் இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு தான் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு […]
Continue reading …“கேஜிஎப் 2” படத்தின் கதாநாயகன் அளித்துள்ள பேட்டியில், “யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என கூறியுள்ளார். “கேஜிஎப் 2” திரைப்படத்தின் புரமோஷனுக்காக யாஷ் சென்னை வந்திருக்கிறார். வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் நிருபர்களை சந்தித்துள்ளார். அப்போது “கர்நாடக மாநிலத்தில் தமிழ் உள்பட பிற மாநில திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது” என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷ், “யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தமிழ்நாட்டில் வெளியாகும் கன்னட படங்களை ரசிகர்கள் […]
Continue reading …நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றப்போகும் “அரபிக்குத்து” மற்றும் “ஜாலியோ ஜிம்கானா” ஆகிய இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் இன்று சற்று முன் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து அவரே பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்த பாடலில் இருக்கும் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் நடிகர் விஜய் உள்ள படத்துடன் சேர்த்து ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள “பீஸ்ட்” திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வருடன் விஜய் உள்ள போஸ்டரை ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு, போஸ்டர், பேனர்கள் போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். புதுச்சேரியில் விஜய்யின் “பீஸ்ட்” படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து […]
Continue reading …