சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால்சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் நுரையீரலில் தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான […]
Continue reading …தமிழகத்தில் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 1 முதல் பள்ளிகளை திறக்க தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச்சில் தமிழக பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இம்மாதம் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்களால் […]
Continue reading …முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு […]
Continue reading …மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது […]
Continue reading …சசிகலா வருகையால் எடப்பாடியாருக்கு சிக்கல் ஏற்படுமா என தெரியவில்லை சசிகலா வருகையால் எடப்பாடியாருக்கு சிக்கல் ஏற்படுமா என தெரியவில்லை சென்னை: சசிகலா உடல்நிலை தேறி, அதிமுகவுக்குள் இணைவதாக இருந்தால், நிச்சயம் பல மாறுதல்கள் கட்சிக்குள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.. அதேசமயம், எடப்பாடியாருக்கு 2 சிக்கல்கள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுக, திமுக கட்சிகள் மும்முரத்தில் உள்ளன.. மற்றொரு பக்கம் பாஜக பல சைலண்ட் வியூகங்களை கையில் எடுத்துள்ளது.. அதில் ஒன்றுதான் சசிகலாவின் […]
Continue reading …கிறிஸ்தவ மத போதகரும்,’இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரன், 1,௦௦௦ கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில்,இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை, வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளர்கள் ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் பல கிளைகள் உண்டு.அதுமட்டுமல்ல […]
Continue reading …சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆட்சியா் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அரசாணையின்படி, படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையினை இருமடங்காக உயா்த்தி ஆணை வெளியானது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தோச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 படித்தவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., […]
Continue reading …எனது நிலத்தால் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் நிரூப்பிருத்தால் அரசியலை விட்டே விலக தயார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல கால்வாய் அமைக்க கேபி முனுசாமி நிலம் உள்ளதால் திட்டத்தை தடுப்பதாக தெரிவித்தார். கலைஞர் மகன் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டான் […]
Continue reading …வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடைய தாத்தா போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி அல்லது திருவாரூர் தொகுதியிலோ போட்டியிடுவார் என்றும் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், “திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே […]
Continue reading …உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு 8.05 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து 15 நிமிடத்தில் செல்லக்கூடிய அமைந்தகரைள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எம்ஜிஎம் மருத்துமனை ஒன்பதாவது மாடியில் உள்ள எக்மோ வார்டில் அறை எண் 934 இல் அமைச்சர் காமராஜ்க்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர […]
Continue reading …