Home » Entries posted by Shankar U (Page 594)
Entries posted by Shankar

மூன்று வேலையும் இலவச உணவு முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!

Comments Off on மூன்று வேலையும் இலவச உணவு முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!

சென்னையில் பொதுமக்களுக்கு நாளை முதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புரெவி புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதேபோல, சென்னையில் மழையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள குடிசை வாழ் மக்களுக்கு உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னை குடிசைவாழ் […]

Continue reading …

பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

Comments Off on பதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதிமாறன்

ரஜினி கட்சியின் அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்ததாக வெளியான செய்திக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் புத்தாண்டு 2021 -ல் முதல் தேதி அன்று கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினி நேற்று அறிவித்தார். மேலும் பாஜகவின் அறிவுசார்பிரிவின் தலைவராக உள்ள அர்ஜூன மூர்த்தியை தனது கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகர் ரஜினி நியமித்துள்ளார்.மேலும், தனது கட்சியில், தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். […]

Continue reading …

விதி மாறியது தெரியாமல் சண்டைக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்!!!

Comments Off on விதி மாறியது தெரியாமல் சண்டைக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்!!!

கன்பெராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக தவான், கேஎல். ராகுல் களமிறங்கினர். தவான் (1), கோலி (9), மணீஷ் பாண்டே (2), சாம்சன் (23) என விரைவில் பெவிலியன் திரும்பினாலும், கேஎல் ராகுல் அபாரமாக ஆடினார். அரைசதம் கடந்த அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். ஆனால், […]

Continue reading …

ஹைதராபாத் தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!!

Comments Off on ஹைதராபாத் தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!!

தெலுங்கானா மாநிலம் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது, மேயரை வென்றெடுக்க தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை மாறாக கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன அதன் படி தெலுங்கானா ராஷ்டிரிய சமதி 55 இடங்களிலும் பாஜக 48 இடங்களிலும், AIMIM 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் […]

Continue reading …

திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்

Comments Off on திமுகவினர் அச்சப்படும் அளவு முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பென்னாலூர்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய சிறுணியம் பலராமன், திமுகவினர் பயப்படும் அளவுக்கு, முதலமைச்சர் சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், கொரோனாவை விரட்டி அடித்த ஒரே முதல்வர் எடப்பாடியார் என்று தமிழகம் வந்த உள்துறை அமைச்சரே, முதல்வரை பாராட்டியதாகவும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து […]

Continue reading …

உதயநிதி மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!!!

Comments Off on உதயநிதி மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு!!!

திமுகவில் பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி நிற்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகளின் குடிநீர் திட்டத்துக்காக தாமிரபரணி ஆற்றின் நீரை கொண்டுவரும் பணியை அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”குடிநீர் கொண்டுவரும் திட்டம் 440 கோடி செலவில் தாமிரபரணியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள். திமுகவில் மட்டுமே நேரடியாக பதவிக்கு வருகிறார்கள். சிவகாசியில் […]

Continue reading …

முன்னாள் IAS அதிகாரிக்கு சம்பளம் கமல் கட்சியில் சலசலப்பு

Comments Off on முன்னாள் IAS அதிகாரிக்கு சம்பளம் கமல் கட்சியில் சலசலப்பு

முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சந்தோஷ் பாபு, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு பொதுச் செயலாளர் (தலைமைஅலுவலகம்)என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் பாபு,1995 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழக தகவல் தொழில்நுட்பத் […]

Continue reading …

முதல்வர் வருகை எதிரொலி தேர்தல் தேதி அதிரடி மாற்றம்!!

Comments Off on முதல்வர் வருகை எதிரொலி தேர்தல் தேதி அதிரடி மாற்றம்!!

சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி வருவதையொட்டி டிச.4-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட […]

Continue reading …

அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

Comments Off on அவசரமாக தலைமை தேர்தல் ஆணையம் சென்ற திமுக காரணம் என்ன?

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அதை கைவிடும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பீகார் […]

Continue reading …

கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக அறிவித்த ஜப்பான்!!!

Comments Off on கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக அறிவித்த ஜப்பான்!!!

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘ அனைத்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகையே […]

Continue reading …