Home » Entries posted by Shankar U (Page 95)
Entries posted by Shankar

சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதை அடுத்து நாளை மற்றும் மார்ச் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிவிப்பில், “பெல்ஸ் […]

Continue reading …

மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

Comments Off on மாற்றுத் திறனாளியான சர்வதேச வாள் வீச்சு வீராங்கனை புகார்!

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பாக சென்னையில் நடந்த தேசிய அளவிலான வீல் சேர் வாள் வீச்சு போட்டியில் கோவை உருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தீபீகா ராணி, மாற்றுத் திறனாளியான தீபீகா, தங்கம், வெள்ளி வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு ஒன்றை அளிக்க வீல் சேரில் வந்த, மாற்றுத்திறனாளி தீபிகா ராணி செய்தியாளர்களிடம், “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொள்வதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு […]

Continue reading …

‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

Comments Off on ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை மீது போலீசில் புகார்!

“சுந்தரா டிராவல்ஸ்” படத்தில் நடித்த ராதா தனது மகனுடன் சென்று இளைஞரை தாக்கியதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “சுந்தரா ட்ராவல்ஸ்” திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலுவுடன் நாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவர் தனது மகனுடன் சென்று ரிச்சர்ட்ஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் தந்தை டேவிட் ராஜ் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்புகாரில் எனது மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் என்பவர் கடந்த 14ம் தேதி சாலிகிராமம் சாலை […]

Continue reading …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: மீண்டும் நேர்முகத்தேர்வு!

Comments Off on டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: மீண்டும் நேர்முகத்தேர்வு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரிவில் நேர்காணல் முடிந்த பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி செய்திக்குறிப்பில், “குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசி கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு […]

Continue reading …

மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி!

Comments Off on மார்ச் 31ம் தேதி வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி!

மார்ச் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்தாண்டு மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதையடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், “மார்ச் 31ம் தேதி ஞாயிறன்று அனைத்து வங்கிகளும் செயல்படும். இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்” என்று […]

Continue reading …

பிரதமர் மோடிதான் பள்ளி வழியாக சென்றார்!

Comments Off on பிரதமர் மோடிதான் பள்ளி வழியாக சென்றார்!

பள்ளி மாணவர்கள் கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணையில் திருப்பங்கள் நடந்துள்ளது. சமீப காலமாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்கிறார். சமீபத்தில் அவர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரை வரவேற்க ‘ரோடு ஷோ’ நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பலரும் சீருடையோடும், அனுமார் உள்ளிட்ட வேடங்கள் அணிந்தும் காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் […]

Continue reading …

ராஜ்ய சபா சீட் உறுதி; பிரேமலதா!

Comments Off on ராஜ்ய சபா சீட் உறுதி; பிரேமலதா!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி, பின் பிரேமலதாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற […]

Continue reading …

இளையராஜாவை பயோபிக்கை படத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Comments Off on இளையராஜாவை பயோபிக்கை படத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து!

இன்று இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது படக்குழுவினரை வாழ்த்தி பேசிய கமல்ஹாசன் “இளையராஜாவை பற்றி படம் எடுக்க வேண்டுமென்றால் 8 […]

Continue reading …

ஷங்கர் – ராம்சரண் படத்தில் 3 வில்லன்களா?

Comments Off on ஷங்கர் – ராம்சரண் படத்தில் 3 வில்லன்களா?

ராம்சரண் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் உலகளவில் பிரபலமானது. இயக்குனர் ஷங்கர் ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் “இந்தியன் 2” படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த […]

Continue reading …

ஆசை நிறைவேறிடுச்சு; தனுஷ் பெருமிதம்!

Comments Off on ஆசை நிறைவேறிடுச்சு; தனுஷ் பெருமிதம்!

இன்று இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். படத்தொடக்க விழாவில் பேசிய தனுஷ் “நான் என் வாழக்கையில் இரண்டு பேரின் பயோபிக்கில்தான் நடிக்க […]

Continue reading …