கூட்டத்தை முடித்துவிட்டு.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஸ்டாலின்.. திமுக வைத்த குறி இன்று கிளைமேக்ஸ்! சென்னை: நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய சந்தோசத்தில் திமுக தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட நிலையில் இன்றே திமுக மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து முழுமையான கூட்டணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் நேற்று திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். […]
Continue reading …தப்பா கணக்கு போடாதீங்க எடப்பாடி! அதிமுகவுக்கு எதிராக களம்.. அதிரடி காட்டும் எம்.எல்.ஏ! செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்.. வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய உடையார்கள் […]
Continue reading …நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் இன்று அறிமுகம் ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களம்! சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், சென்னையில் ஒரே மேடையில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் […]
Continue reading …காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து! காங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களை பெற்றிருப்பதற்கு, திமுகவை குற்றம் சொல்லி […]
Continue reading …விஜயகாந்தை சந்தித்தாரா வடிவேலு? இணையத்தில் பரவும் செய்தி! தமிழ் சினிமாவின் இரு முக்கிய ஆளுமைகளான விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே 10 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. தமிழ் சினிமாவின் கதாநாயகன் காமெடியன் ஹிட் காம்போவில் விஜயகாந்த் வடிவேலு காம்போவுக்கு தனியிடம் உண்டு. ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது. இதனால் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வடிவேலு வீட்டின் முன் கல்வீசினர் என்று போலிஸில் புகார் எல்லாம் கொடுக்கப்பட்டது. 2011 […]
Continue reading …350 ஏக்கர் பரப்பளவு; 3 பிரமாண்ட மேடைகள்; 10 லட்சம் தொண்டர்கள். திருச்சியில் மாஸ் காட்டும் திமுக! திருச்சி: திமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடித்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது. திருச்சி மாநாட்டில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின், உதயநிதி ஒன்றாக இருக்கும் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. ”கட்சியின் அடுத்த எதிர்காலமே” என்று உதயநிதியைப் புகழ்ந்து வைத்த பாதாதைகளும் பல இடங்களில் […]
Continue reading …அமமுக முக்கிய நிர்வாகிகளை தூக்க அதிரடி திட்டம் தினகரனை திக்குமுக்காட வைக்கப்போகும் எடப்பாடியார்! சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி.தினகரன் பக்கம் வலுவாக இருக்கும் அமமுக நிர்வாகிகளை அதிமுக பக்கம் இழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் c. இவர் அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியை பிடித்தது. […]
Continue reading …அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு! கன்னியாகுமரி: சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று பிரசாரம் […]
Continue reading …“ஓபிஎஸ் மகனுக்கு சீட்டு”: அதிமுக %3D உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி உடன் பிஜேபி, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது, இதில் பாமகவுக்கு 23 ,பாஜகவுக்கு 20 என ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுடன் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவுக்கு 17 தொகுதிகள் ,ஒரு எம்.பி. சீட்டு என்ற அதிமுகவில் முடிவுக்கு தேமுதிக இணங்கவில்லை.இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் 2வது நாளாக […]
Continue reading …நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா! தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தினம் தினம் திரைப்பட க்ளைமேக்ஸ் காட்சிகளை விட விறுவிறுப்பாக தேர்தல் காட்சிகள் மாறி வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுபறியாக இருந்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்து, இன்று காலை சுமூகமாக கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் இன்னும் தேமுதிக ஒரு முடிவுக்கு வராத நிலையில், நடிகர் […]
Continue reading …