எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெருமளவில் சரிந்தது. அவ்வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் […]
Continue reading …இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசித் தாக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இந்தி சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் கைலாஷ் கேர். இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். கடந்த 2022ம் ஆண்டு வெளியான “வைசா பி ஹோதா ஹை பரர்ட் 2” என்ற படத்தில் இடம்பெற்ற “அல்லாஜ் கே பந்த்” என்ற பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், “வெயில்” […]
Continue reading …தனது 3 வயது குழந்தையை குழந்தையின் தந்தையே கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோசந்திரகிர் லோதி. இவர் கடந்த புதன்கிழமை அன்று குடிபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் தன் 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டிக் […]
Continue reading …சாலையோர துணி வியாபாரி ஒருவர் ரூ.366 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர துணிக்கடை வியாபாரி அகமது என்பவர் தினமும் 500 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்துள்ளார். அவருக்கு ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ரூபாய் 366 கோடியை வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே தன்னுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டதாகவும் அவரது ஜிஎஸ்டி எண்ணை மர்ம நபர்கள் சிலர் […]
Continue reading …புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலைகளை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில் மார்பக புற்றுநோய் மருந்து ரூ.80,000லிருந்து ரூ.3800ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3800 […]
Continue reading …பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உஷா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி விரிந்தா திரிபாதி(16). அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன் கிழமை அன்று வழக்கம் போல் அவர் பள்ளிக்குச் சென்றார். குடியரசுத் தினவிழாவுக்கு ஒத்திகை நடந்த நிலையில், ஒத்திகை முடிந்தபின் அவர் வகுப்பிற்குச் சென்றார். வகுப்பிற்குச் சென்றதும் அவர் மயங்கி விழுந்தார். […]
Continue reading …நிதிஸ்குமார் தலைமையில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவின் சகோதரர் நியமல் சவுபே மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, 2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பகல்பூரில் வசித்து வரும் நிர்மல் சவுபேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்தார். எனவே, மருத்துவர்கள் அலட்சியத்தால் அவர் […]
Continue reading …சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பதான்.” யஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான பாலிவுட் படங்கள் வெற்றிபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஷாருக்கானின் பதான் படம் ஒட்டுமொத்த பாலிவுட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள […]
Continue reading …காங்கிரஸ் பிரபல அதானி நிறுவனம் மீது அமெரிக்க ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனால் இந்திய பொதுமக்களின் பணம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் கால்பதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதானி நிறுவன பங்குகள் 819 சதவீதம் உயர்ந்து 120 பில்லியன் டாலரை எட்டியுள்ளன. இதனால் அதானி உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்தில் கௌதம் அதானி உள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பல ஆண்டுகளாக […]
Continue reading …3வதாக பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதியரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலூகாவின் தியாத்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவல்லலால் மேக்வால் (35). இவர் அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீதா தேவி (33) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. அவரது மனைவிக்கு 3 வதாக குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டம் அமலில் உள்ளதால், […]
Continue reading …