தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]
Continue reading …“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்தாண்டு இத்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் […]
Continue reading …அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா “கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ‘போதைப் பொருட்கள் […]
Continue reading …சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தி,மலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது
Continue reading …புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “எனக்கு மீனும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும்” என பேட்டியளித்துள்ளார். தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் மீன் உணவை சைவமாக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “மீன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் மீனில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை சைவ உணவிடம் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். மேற்குவங்கத்தில் […]
Continue reading …அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சி பொறுப்பேற்று 27 மாத காலம் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம், பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப்-க்கு பதிலாக […]
Continue reading …பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளராக சங்கீதா பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் திடீரென அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவின் தற்கொலைக்கு வழக்கறிஞர்கள் கொடுத்த மன அழுத்தமே காரணம் […]
Continue reading …மதுரை பாஜகவினர் “மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி பேட்டியளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை “அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் […]
Continue reading …பள்ளி சிறுமியை சென்னையில் பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வீடுகளில் ஆடு, மாடு, பூனைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. ஆனால், இவற்றை பொது இடங்களில் விடுவதால் ஒரு சில நேரங்களில் மக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அவ்வழியே சென்ற பள்ளி சிறுமியை முட்டித் தூக்கி வீசியது. அந்த பசு மாட்டிடம் இருந்து சிறுமியை மீட்கப் பலரும் […]
Continue reading …உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மிக மோசமான விசாரணை செய்யப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இவ்வழக்கை தானாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் எடுத்துள்ளேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இவ்வழக்கில் மிக மோசமான முறையில் […]
Continue reading …