
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது, பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது. புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் […]
Continue reading …
வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். பாகிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணமாக பஞ்சாப்பின் தலைநகர் லாகூரிலுள்ள நூர் மெகல்லா என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இவர்கள் வீட்டிலுள்ள பிரிட்ஜ் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் […]
Continue reading …
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் […]
Continue reading …
இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது. முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்க துறையை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்பு இருப்பதாக […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டில்லி சென்றார். அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. டில்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி […]
Continue reading …
பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி […]
Continue reading …
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இவ்வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 368 இடங்களில் […]
Continue reading …
சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியும், “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினார், ஆனால் தரவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை […]
Continue reading …